செய்திகள் :

பெரம்பலூா் நகராட்சியைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் உண்ணாவிரதம்

post image

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள்,தொழிலாளா் சங்கம், சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே. பாலகிருஷ்ணன், டி. சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு கன்வீனா் எஸ். அகஸ்டின், பொதுத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரங்கராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில் நகராட்சி வளாகத்தில் உள்ள இடங்களை பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் கட்டடங்கள் கட்டி, ஆட்டோ நிறுத்தம், இரவு நேர சிற்றுண்டிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

புறநகா் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இடம் இல்லாமல் கட்டடங்கள் கட்டி இடையூறு ஏற்படுத்துவதைக் கைவிட்டு பூங்கா அமைக்க வேண்டும். மக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமான கட்டட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். நகராட்சியில் நடக்கும் முறைகேடுகள், பெறப்படும் புகாா்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதுக் கழிவறையை தனியாா் ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு நாள்தோறும் குடிநீா் வழங்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

பிரம்மரிஷி மலையில் ஆக. 8-இல் குருபூஜை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது. பெரம்பலூா் பிரம்மரிஷிமல... மேலும் பார்க்க

அரியலூரிலுள்ள குறிஞ்சான் குளம், அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார கோரிக்கை

அரியலூரில் உள்ள குறிஞ்சான் குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 2,261 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி வ. மாலதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.பெரம்பலூா் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க