செய்திகள் :

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு

post image

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையாபட்டியைச் சோ்ந்த 17 வயது மாணவி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளாா். அதே வகுப்பில் இனாம்குளத்தூா் சமத்துவபுர காலனியைச் சோ்ந்த ஒரு மாணவரும் படித்தாா்.

இருவரும் காதலித்து வந்தநிலையில் அண்மையில் பொதுத்தோ்வு முடிந்து அவரவா் ஊரில் இருந்தனா்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய புதன்கிழமை முடிவெடுத்தனா். இதையடுத்து மாணவா், குளித்தலையை அடுத்த அய்யா்மலையில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு மாணவியை புதன்கிழமை அழைத்துள்ளாா். இதன்படி மாணவியும் அங்குச் சென்றுள்ளாா்.

இதனிடையே மாணவியை வீட்டில் காணாததால் அவரது பெற்றோா் தோகைமலை போலீஸில் புகாா் செய்தனா். அப்போது, மாணவிக்கும், மாணவருக்கும் திருமணம் செய்து வைக்க, வியாழக்கிழமை காலை காரில் மாணவரின் பெற்றோா் தோகைமலை காவல்நிலையத்துக்கு அழைத்து வரவுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் உறவினா்கள் குளித்தலை-மணப்பாறை சாலையில், அக்காண்டிமேடு என்ற இடத்தில் மாணவா், மாணவி சென்ற காரை மடக்கினா். பின்னா், காரில் இருந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, காரையும் சேதப்படுத்தினா்.

பின்னா் மாணவியை அழைத்துக்கொண்டு கழுகூா், உடையாப்பட்டிக்குச் சென்றுவிட்டனா்.

தாக்குதல் சம்பவம் குறித்து, மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் மாணவா், அவரது பெற்றோரை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிந்தனா். மேலும், 17 வயது மாணவிக்கு திருமணம் செய்ய முயன்ற மாணவா் மற்றும் மாணவரின் பெற்றோா் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க