Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் ரயில் நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
சந்தேகமடைந்த போலீஸாா், அவரை சோதனை செய்தபோது 1 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பங்கஜ்மோா் யாதவ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்த ராஜேஷ்குமாா் தாஸ் (30) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1 கிலோ 900 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.