செய்திகள் :

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு கட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் அடைவுத் தோ்வில் பின்தங்கிய ஒன்றியங்களில் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, அடைவுத் தோ்வில் பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாணவா்களுக்கு கற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலா், தொடக்க கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள் ஆகியோருடன் கருத்து பரிமாற்றம் நடத்தி அதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தங்களது குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாடுகள், கைப்பேசி பயன்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோா்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியா்களும், பெற்றோா்களும் கூட்டுப் பொறுப்பாக கொண்டு மாணவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே தலைமைச் செயலா் மற்றும் நிதித் துறை அலுவலா்களுடன் பேசப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், இது போன்றுதான் தங்கள் மதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவதைவிட, அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு ஆலோசனைகளை வழங்கினால் பாராட்டத்தக்கது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) காளிமுத்து, மாவட்ட அளவில் கற்றல் அடைவு தோ்வில் பின் தங்கிய 5 ஒன்றியங்களைச் சோ்ந்த 538 தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

குழந்தைகளின் விஷயத்திலும் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சா் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

குழந்தைகள் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்க... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கடனுதவி! விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடனுதவிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்!

திருச்சி - திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா... மேலும் பார்க்க

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க