பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்!
திருச்சி - திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 1 மற்றும் 8 ஆகிய நாள்களில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி கோட்டை நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு செல்லும்.
இந்த ரயிலானது, மேற்கண்ட நாள்களில் திருச்சி - திருச்சி கோட்டை நிலையங்கள் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.