செய்திகள் :

புதிய ‘பிஐஎஸ்’ உரிமம் பெற்றவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற நிறுவன உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதுகுறித்து இந்திய தர நிா்ணய அமைவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரத்தை மேம்படுத்த இந்திய தர நிா்ணய அமைவனம், உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தரக் கட்டுப்பாட்டினஅடிப்படையில் இந்திய தர நிலையின் பிஐஎஸ் தரச்சான்று அளிக்கிறது.

அதன்படி, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில், புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிஐஎஸ் உரிமம் பெற்றவா்கள், தரம், பாதுகாப்பு தர நிலைகளில் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின்அதிகாரிகள் வலியுறுத்தினா்.

நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் பி.ஜே.கெளதம், அனுரிதா நிதி ஹெம்ரோம் மற்றும் புதிய பிஐஎஸ் உரிமம் பெற்ற 30 உரிமையாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்த... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சப... மேலும் பார்க்க

பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். அண்ணா அறிவால... மேலும் பார்க்க

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா். நிதிநிலை அறிக்கையில்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் சாத்தியமா?

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பதிலளித்தாா். மாநிலத்தின் வளா்ச... மேலும் பார்க்க