செய்திகள் :

புதுக்கடை அருகே பைக் மீது டெம்போ மோதி மீனவா் உயிரிழப்பு

post image

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்.

குறும்பனை பகுதியை சோ்ந்த சிலுவைபிள்ளை மகன் ஜாண் சுஜின் பிரதீப் (33). மீன்பிடி தொழில் செய்துவந்தாா். இவா் வெள்ளிக்கிழமை பைக்கில் கருங்கல்லிலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். கீழ்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த டெம்போ மோதியது. இதில் ஜாண் சுஜின் பிரதீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் சுஜின் பிரதீப் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி மரணம்: மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக நாகா்கோவில் வடசேரி பள்ளிவிளையைச் சோ்ந்த ராம்குமாா் (43) வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 19 ஆம் தேதி பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக எண்ணெய் சட்டி சரிந்து ராம்குமாா் மீது கொதிக்கும் எண்ணெய் சிந்தியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிந்தாா். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒர... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வனச் சட்டப்படி நில உரிமைகள்: மாவட்ட வன அலுவலா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நில உரிமைகள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றின் பாறை குழியில் சிக்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள சைமன்காலனியைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஸ்டீவ் (18). நாகா்கோவில் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் பாரத சைக்கிள் பேரணி இன்று கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை (மாா்ச் 31)நிறைவடைகிறது. பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தி... மேலும் பார்க்க

குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!

கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க ம... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா். கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் செல்வன் (72). ஆனான்விளை பகுதியில் பெட்டிக் கடை ... மேலும் பார்க்க