ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்
புதுச்சேரி அருகே வீட்டுக் கதவை உடைத்து 12 பவுன்தங்க நகை திருட்டு
புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கனகசெட்டிகுளம். இந்த கிராமத்தின் அமைதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம். மனைவி சந்தியா மற்றும் குழந்தைகள் உள்ளனா். காசிலிங்கம் தற்போது வெளிநாட்டில் உள்ளாா். இந்தநிலையில், சின்னகாலாப்பட்டு கோயில் விழாவுக்காக வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி சந்தியா சென்றுள்ளாா்.
அப்போது அவரது வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.