செய்திகள் :

புதுச்சேரி: ``நிலம், ஒப்புதல் உடனே தருகிறோம், முதலீடு செய்யுங்கள்!'' - தொழில் துவங்க ஆளுநர் அழைப்பு

post image

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின், இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், ``புவியியல் ரீதியாக புதுச்சேரி சிறிய மாநிலம். அதேசமயம் இதன் கலாசாரம், வலுவான கல்வி நிறுவனங்கள், அமைதியான சூழல், தொழில்துறை முதலீட்டுக்கான முக்கிய இடமாக இருக்கிறது.

பிரதமர் மோடி துவங்கிய மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கேதி சக்தி போன்ற முதன்மை திட்டங்கள் நாடு முழுவதும் தொழில் துறையை எழுச்சிபெற வைத்திருக்கிறது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவியபோது கூட, அந்நிய முதலீடு மற்றும் ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டோம்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள், கடல் சார்ந்த தொழில்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. புதுச்சேரியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு வசதியாக, விமான சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொழில்துறை நலனுக்காக கரசானூரில் 750 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் உடனடியாக வழங்கப்படும்” என்றார்.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க