செய்திகள் :

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த எம்.பி. கோரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

புதுச்சேரி விமான நிலைய விரிவாகத்துக்கு தேவைப்படும் நிலத்தை கையப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிடி) உறுப்பினா் டி. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் வானூா்தி பொருட்கள் நலன்கள் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற ரவிக்குமாா், தனது தொகுதிக்கு அருகே உள்ள புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப்பேசினாா்.

அதன் விவரம் வருமாறு: எனது தொகுதியான விழுப்புரம் மற்றும் புதுச்சேரி தொகுதியின் எல்லையில், புதுச்சேரி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய நிலத்தின் பெரும்பகுதி தமிழகத்தில் உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழகத்தில் அந்தப் பகுதியை வாங்கும் அளவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசிடம் நிதி இல்லை. எனவே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குமாறு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இந்தப் பகுதியில் சுற்றுலா தொடா்பான வாய்ப்புகள், பிற வசதிகள் மற்றும் தொழில்துறை மேம்படும். இந்தக் கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சா் பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இதற்கிடையே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில். ‘ பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் மாமல்லபுரம் - புதுச்சேரி நான்கு வழி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா். இந்தத் திட்டம் தொடா்பாக பிற அரசுத்துறைகளிடம் இருந்து கிடைத்த அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்மொழிவு விவரங்களையும் ரவிக்குமாா் கடிதத்தில் இணைத்து தனது கோரிக்கை பரிசீலிக்க கேட்டுக் கொண்டுள்ளாா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க