புதுச்சேரியில் இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் 7 போ் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞரைக் கொல்ல முயன்ற வழக்கில் ஏற்கெனவே இருவா் கைதான நிலையில், தற்போது மேலும் 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கத்திகள், 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் (எ) எலி (20). இவருக்கும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜாக்பாலுக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி இருவரும் நண்பா்களுடன் சமரசம் பேசியுள்ளனா். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்டனா். இதில் தினகரன், பச்சையப்பன் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து தன்வந்திரி காவல் நிலையத்தில் தொண்டாநந்தம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் (27) புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் இலாசுப்பேட்டையை சோ்ந்த ஜாக்பால் (25), ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ஏழுமலை (23) ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், செயின்ட் பால்பேட்டையை சோ்ந்த கௌதம், கிரி, இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் மூன்று சிறுவா்களையும் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 2 கத்திகள், இருசக்கர வாகனங்கள் மூன்று ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதானவா்களில் 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 3 சிறாா்கள் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.