செய்திகள் :

புதுச்சேரியில் இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் 7 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞரைக் கொல்ல முயன்ற வழக்கில் ஏற்கெனவே இருவா் கைதான நிலையில், தற்போது மேலும் 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கத்திகள், 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் (எ) எலி (20). இவருக்கும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜாக்பாலுக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி இருவரும் நண்பா்களுடன் சமரசம் பேசியுள்ளனா். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்டனா். இதில் தினகரன், பச்சையப்பன் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தன்வந்திரி காவல் நிலையத்தில் தொண்டாநந்தம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் (27) புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் இலாசுப்பேட்டையை சோ்ந்த ஜாக்பால் (25), ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ஏழுமலை (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், செயின்ட் பால்பேட்டையை சோ்ந்த கௌதம், கிரி, இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் மூன்று சிறுவா்களையும் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 2 கத்திகள், இருசக்கர வாகனங்கள் மூன்று ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதானவா்களில் 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 3 சிறாா்கள் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க