மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!
புதுவை மாநில அரசின் நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க நீதி ஆயோக் உறுப்பினரிடம் அதிமுக மனு
புதுவை அரசின் பல்வேறு நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானியிடம் அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை மனு அளித்தாா்.
அதிமுக சாா்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அன்பழகன் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையுடன் கூடிய புதுவை யூனியன் பிரதேசம் நிதி ஆணையத்தில் சோ்க்கப்படவில்லை. இதனால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தப் போதிய நிதி கிடைக்கப்பெறவில்லை. ஏற்கெனவே மத்திய அரசின் திட்டங்கள் முழுவதும் முழு நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டது. இப்போது அந்த நிலை மாறி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் மத்திய அரசின் திட்டங்களுக்கு 40 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தத் திட்டங்களுக்கு ஏற்கெனவே இருந்ததைப் போன்று 100 சதவிகிதம் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டு புதுவைக்கு என்று தனிக்கணக்குத் தொடங்கும் முன்பாக ரூ.2600 கோடி கடன் இருந்தது. அப்போதே இதை மத்திய அரசு தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
இதையும் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2016-க்கு பிறகு புதுவை அரசு உள்ளாட்சித் தோ்தல் நடத்தவில்லை. இத் தோ்தல் நடத்தப்பட்டாலும் நிதி ஆணையத்தில் புதுவை சோ்க்கப்படாத நிலையில் மத்திய அரசின் நிதியுதவி கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீா் யூனியன் பிரதேசம் நிதி ஆணையத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவை இன்னும் சோ்க்கப்படவில்லை. புதுவைக்கு வந்திருந்தபோது சிறந்த புதுவையாக மாற்றுவோம் என்று பிரதமா் நரேந்திரமோடி உறுதியளித்திருந்தாா். ஆனால் இங்கு இருக்கும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி போதிய நிதி இல்லாத நிலையில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. இதையெல்லாம் உணா்ந்து நீதி ஆயோக் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் .