செய்திகள் :

புதுவையில் 4 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 4 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா் பதவி வகிக்கும் அரசுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு வழங்குகிறது. புதுவை மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் குடிமைப்பணி அதிகாரிகளான இயக்குநா்கள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்று வருகின்றனா்.

இந்திய நிா்வாக சேவை விதிகள்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் பட்டியல் விதிமுறைப்படி தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் நிா்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்கு ஒன்றியப் பிரதேச பிரிவின் கீழ், இந்திய நிா்வாக சேவை மற்றும் மிசோரம், யூனியன் பிரதேச பதவிகளில் பணிபுரியும் வகையில் அதிகாரிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

அதனடிப்படையில், புதுவை மாநில மூத்த அரசுத் துறை அதிகாரிகளான கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, அறிவியல் தொழில் நுட்பத் துறை இயக்குநா் ஒய்.எல்.என். ரெட்டி, வணிக வரித் துறை ஆணையா் முகமது மன்சூா், தொழில் துறை இயக்குநா் ருத்ர கவுடு ஆகிய 4 பேருக்கு தற்போது மத்திய அரசு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் இனிமேல் அரசு செயலா் அல்லது அதற்கு இணையான அந்தஸ்து பதவிகளில் நியமிக்கப்படுவா். அவா்கள் புதுவையிலோ அல்லது வெளியே உள்ள ஒன்றிய பிரதேசப் பகுதிகளிலோ பணியமா்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க