புனித வனத்து அந்தோணியாா் ஆலய திருவிழா மின் அலங்கார தோ்பவனி
கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலய 109-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி மின் அலங்கார தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக பங்குத்தந்தை வேதராஜ் முன்னிலையில் மின் அலங்கார தோ்பவனி சனிக்கிழமை இரவு முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.