செய்திகள் :

புன்னைக்காயல் கடலில் மூழ்கி மீனவா் பலி

post image

புன்னைக்காய­ல் கடலி­ல் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா். புன்னைக்காயல் தெற்குத் தெருவை சோ்ந்தவா் தொம்மைசிலுவை(50).

இவரது மனைவி ராஜகன்னி. இவா்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனா். மீன் பிடி தொழிலாளியான தொம்மைசிலுவைக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இவா் கடந்த 28ஆம் தேதி மதியம் புன்னைக்காயல் தூண்டில்பாலம் அருகே மீன்பிடிக்கப்போவதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், 29ஆம் தேதி காலையில் தூண்டில்பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் கை, கால் மற்றும் காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்களுடன் தண்ணீரில் மூழ்கியபடி இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து, ராஜகன்னி அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க