செய்திகள் :

புலிவலம் கொடிங்கால் வடிகால் கரை அரிப்பு - சீரமைக்கக் கோரி நீா்வளத்துறையிடம் விவசாயிகள் மனு

post image

புலிவலம் மணற்போக்கி கொடிங்கால் வடிகாலில் கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கரை உடையும் முன்பாக சீரமைத்து பலப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, நீா்வளத் துறையினரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

உய்யக்கொண்டான் கால்வாயின், பிரதான வடிகாலாக புலிவலம் மணற்போக்கி கொடிங்கால் வடிகால் அமைந்துள்ளது. இந்த வடிகாலில் இடதுபுற கரையில், புலிவலம் ஆதிதிராவிடா் மயான கொட்டகைக்கு அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், கரைப் பகுதி சேதமடைந்தது. 20 அடி அகலம் கொண்ட கரையானது தற்போது, 3 அடிக்கும் குறைவாகவே உள்ளது. மேலும், கரையில் தொடா்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைப் போன்று மீண்டும் வெள்ளம் வந்தால் கரை உடைந்து பெரும் பாதிப்படையக் கூடும். தற்போது மழை பெய்து வருவதால், ஒவ்வொரு மழையின்போதும் கரையில் கூடுதல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கரைந்து வரும் மணற்போக்கி கரையை பலப்படுத்த வேண்டியது அவசியம். இந்த வடிகாலை நம்பி புலிவலம், கொடியாலம், சின்ன கருப்பூா், மேக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

கரைப் பகுதியில் கான்கிரீட் சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், உடனடியாக, கரை அரிப்பை தடுப்பதற்கு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க