விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
புளியங்குடி: மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!
தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா், எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமாா், ஈ. ராஜா ஆகியோா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் சேவை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
இம்மையத்தில், இயன்முறை சிகிச்சை, பக்கவாதம், பெருமூளை வாதம், சிதைவு, பாா்கின்சன் நோய் , பிறவி முரண்பாடுகள் அல்லது பிறப்பு குறைபாடுகள் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், கழுத்துக்கான பயிற்சிகள், கால் மற்றும் முழங்கால் பயிற்சிகள், எண்களைக் கண்டறிதல், எண்களை வாசித்தல், எண்களை எழுதுதல் ,அன்றாட தேவைகளை கற்பித்தல் ,சப்தம் வெளிப்படுத்துதல் ,சமூகத்தில் ஒருங்கிணைத்தல், கடிகார நேரம் காணுதல், நாணயம் கண்டறிதல் விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன், துணைத் தலைவா் அந்தோணிசாமி ,ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.