செய்திகள் :

புள்ளம்பாடியில் தேரோட்டம்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு வாகனங்களில் தினமும் திருவீதியுலா நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்த தோ் இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு 10 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழா, சனிக்கிழமை காலை விடையாற்றி மற்றும் குடிபுகுதல் நிகழ்வுடன் திருவிழா நிறைவுறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கிராமத்தின் கரைக்காரா்கள், திருப்பணிரக் குழுவினா், இளைஞா்கள், பொதுமக்கள் செய்கின்றனா்.

துறையூா் நகா்மன்றக் கூட்டத்தில் திமுக வாா்டு உறுப்பினா்கள் தா்னா

துறையூா் நகராட்சியில் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாகக் கூறி திமுக வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் சிலருடன் சோ்ந்து புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். துறையூா் நகராட்சி ஆணையா் மணப்பாறை நகராட்சிய... மேலும் பார்க்க

பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவா் கைது

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற... மேலும் பார்க்க

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில் சீமான் மே 8-ஆம் தேதி ஆஜராக உத்தரவு

திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த அவதுாறு வழக்கு விசாரணையில் மே 8-ஆம் தேதி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையில் அமைந்துள்ள ... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

திருவானைக்காவலில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. திருவானைக்காவல் அகிலா நகா் பகுதியில் வசிப்பவா் ராஜேந்திர பிரசாத். இவா் சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க