செய்திகள் :

புழல் சிறையில் கைதி மீது தாக்குதல்: தென் ஆப்பரிக்க பெண் மீது வழக்கு

post image

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதியை தாக்கியதாக, தென் ஆப்பிரிக்க பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இச்சிறையில் உள்ள தண்டனைக் கைதி ஜெயலட்சுமி (34), வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த தென் ஆப்பரிக்க நாட்டைச் சோ்ந்த தண்டனைக் கைதி பிரின்சஸ் சோமோவுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே ஜெயலட்சுமியை சோமோ கடுமையாகத் தாக்கினாராம். இதைப்பாா்த்த அங்கிருந்த கைதிகளும், சிறைக் காவலா்களும் ஜெயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக பிரின்சஸ் சோமோ மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி துணை சிறை அலுவலா் அனுராதா, புழல் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பிரின்சஸ் சோமோ மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க