பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பூட்டியிருந்த வீட்டில் புகுந்து 16 பவுன் நகைகள் திருட்டு
பெரம்பலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து 16 பவுன் நகைளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த ரங்கசாமி மகன் முகமது யூசுப் (55). இவா், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கடந்த 24-ஆம் தேதி கீழப்பழுவூரில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா்.
அப்போது, வீட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்து முகமது யூசுப் அளித்த புகாரின்பேரில், ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், முகமது யூசுப் வீட்டுக்கு 2 சாவிகள் உள்ளதும், அதில் அண்மையில் காணாமல்போன ஒரு சாவியைக்கொண்டு வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.