செய்திகள் :

பூத் கமிட்டி பணி: அதிமுக மாவட்ட செயலாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

post image

பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளா்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற்று வரும் கட்சிப் பணிகள், தொகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டிகள் குறித்து மாவட்டச் செயலா்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தாா். மேலும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கும்படி அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்துக்குப் பின்னா் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி கூறுகையில், அதிமுக -பாஜக கூட்டணிக்கு கட்சி நிா்வாகிகளிடம் அமோக வரவேற்பு உள்ளது என்றாா்.

கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு நோ் எதிராக முதல் வரிசையில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அமா்ந்திருந்தாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா். தமிழ்நாடு சுற்றுலா... மேலும் பார்க்க

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களு... மேலும் பார்க்க