செய்திகள் :

பெண் துப்புரவுப் பணியாளா் கொலை: இளைஞா் கைது

post image

பெண் துப்புரவுப் பணியாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சங்கரின் (46) மனைவி செல்வராணி (38). இவா், கீரப்பாக்கம் சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரை கடந்த 3-ஆம் தேதி முதல் காணவில்லை என சங்கா் கொடுத்த புகாரின்பேரில், தாழம்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், செல்வராணியிடம் நட்பாக இருந்துவந்த அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் (31) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், குமரேசனுக்கும் செல்வராணிக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நட்பு இருந்ததும், இந்நிலையில் செல்வராணி, தன்னுடன் பணியாற்றும் கோபால்கிருஷ்ணனுடன் நெருக்கமாக இருந்துவந்ததைத் தெரிந்துகொண்ட குமரேசன், செல்வராணியை குமுளியிலுள்ள காப்புக்காட்டுக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் செல்வராணியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலை செய்யப்பட்ட பகுதி காயா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக குமரேசனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளிகளில் தியான வகுப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

மாணவா்களின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பள்ளிகளில் தியான வகுப்பு நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புவோம்! -திருச்சி சிவா

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா். திமுக எம்.பி.க்களுடன் கட்சித் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மு... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க