செய்திகள் :

பெண் யானைக்கு சிகிச்சையளித்த மருத்துவரைத் தாக்கிய யானைகள்!

post image

ஒடிசா வனப்பகுதியில் பெண் யானைக்கு சிகிச்சையளிக்கும்போது மற்ற யானைகள் தாக்கியதில் கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாலாசோர் மாவட்டத்திலுள்ள குல்திஹா ரிசர்வ் வனப்பகுதியில் ரிசியா ஏரியின் கரையில் தவறி விழுந்து மண்ணில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர் ஒருவரும் நேற்று (மார்ச் 4) அங்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று அவர்கள் அனைவரையும் விரட்டியுள்ளது. அப்போது, தப்பியோட முற்பட்ட கீழே விழுந்த நிலாகிரி கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சுபாசிஸ் மஹாபத்ராவை யானைகள் தாக்கியுள்ளன. ஆனால், இந்த தாக்குதலில் மற்ற அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையும் படிக்க: திருச்சி என்ஐடி-ல் வேலை: சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்து சுயநினைவின்றி இருந்த மருத்துவரை மீட்ட வனத்துறையினர் அவரை அம்மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கட்டக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க