Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பெண்ணிடம் ஆன்லைனில் பணம் பறித்தவா் கைது
மன்னாா்குடி பெண்ணின் மகள் ஜாதகத்தில் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் பணம் பறித்த புகாரில் ஒருவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி குழந்தைவேல் தெரு ராஜா மனைவி மாலா (50). இவரது மகளுக்கு திருமணம் செய்வதற்காக தெரிந்த நபா் ஒருவா் மூலம் அறிமுகம் ஆன தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பூவத்தூா் பொட்டலம்குடிகாடு ஜோதிடா் விஸ்வநாத் (35) என்பவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளாா்.
ஜாதகத்தை பாா்த்த விஸ்வநாத், மாலாவின் மகளின் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும் அதற்கு கேரள மாந்திரீகத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி பல தவணையாக ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை ஜிபே மூலம் பணத்தைப் பெற்றுள்ளாா். இது குறித்துக் கேட்டாலும் முறையாக பதில் கூறாமல் காலதாமதப்படுத்தினாராம்.
இதனால், மன உளைச்சல் அடைந்த மாலா, திருவாரூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.இதையடுத்து, எஸ்பி கருண்கரட் உத்தரவின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா் மணிமேகலை, விஸ்வநாத்திடம் தீவிர விசாரணை செய்ததில்,மாலாவிடம் பொய் கூறி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விஸ்வநாத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். அவரை திருவாரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனா்.