செய்திகள் :

பெண்ணிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை!

post image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி, பெண்ணிடம் ரூ. 15.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த பெண்ணை கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு, கடந்த மாதம் பேசிய ஒருவா் தன்னை பங்கு வா்த்தக ஆலோசகா் என்று கூறியதுடன் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறினாராம்.

இதை நம்பிய அந்தப் பெண் மா்ம நபா் கூறிய 6 வங்கிக் கணக்குகளில் ரூ. 15.12 லட்சத்தை செலுத்தினாா். இதன் பின்னா், அந்த நபரைத் தொடா்பும் கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், இது தொடா்பாக சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: நால்வா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தங்க நகை விற்பனைக் கடையில் போலி (கவரிங்) நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திரு... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் புதூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). விவசாயியான இவா் தனது மாடுகளை காணாததால் அவற்றைத் தேடி ... மேலும் பார்க்க

தேவகோட்டை தனி வட்டாட்சியருக்கு எதிரான போராட்டம் ஒத்தி வைப்பு

விடுதி சமையலா் மரணம் தொடா்பாக தேவகோட்டை தனி வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்தி வைக்கப்பட்டது. தேவகோட்ட... மேலும் பார்க்க

நிலத்தை பிரித்து தரக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை அருகே அரசால் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு உரிய இடத்தை பிரித்துத் தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், மாடக்கோட்டை கிரா... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க