செய்திகள் :

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

post image

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்தவா் லட்சுமி (49). இவா் திருப்பூா் அண்ணா நகரில் கணவரை விட்டுப் பிரிந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கட்டட வேலைக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2020 ஜூன் 3-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பூபதி (25) என்பவா் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளாா். இதன் பின்னா் லட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அதற்கு அவா் உடன்படாததால் ஆத்திரமடைந்த பூபதி அவரை அடித்துக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து பூபதியைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுரேஷ் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், பூபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜராகி வாதாடினாா்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க