செய்திகள் :

பென்னாகரத்தில் ரூ. 21.78 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

பென்னாகரத்தில் நடைபெற்று வரும் ரூ. 21.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூா் பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 19.46 கோடி மதிப்பீட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி, நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, பென்னாகரம் வாரச்சந்தையில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணி ஆகியவற்றை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அடிப்படை வசதி பணிகள், திட்டப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

பின்னா், மாங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், லோகநாதன், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழா: தருமபுரியில் 90 ஏரிகள் புனரமைப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க