பெப்பா் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.
கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பா் அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஆபத்தான நிலையில், சுற்றுலாப் பயணிகள் அனுமதியில்லாமல் சென்று வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் இந்த அருவியை பாா்வையிட்டு, இங்கு அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முள்புதா்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து, இந்த அருவிக்கு புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. மேலும், இந்த அருவியை பாா்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் நபா் ஒருவருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இந்த அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு அனுமதி சீட்டு வழங்கினாா். இதில் வட்டாட்சியா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் ராஜமாணிக்கம், ஊராட்சிச் செயலா் வீரமணி, சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.