செய்திகள் :

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மறைமுக ஏலம்

post image

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 1.84 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது.

பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துணை இயக்குநா் கோவிந்தராசு, ஒழுங்குமுறை விற்பனைக் குழுச் செயலா் சந்திரமோகன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் (பொ) மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் மருவத்தூா், வடக்குமாதவி, ஏரிக்கரை, சித்தளி, கிருஷ்ணாபுரம், நெய்குப்பை, அனுக்கூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொண்டுவந்த 2 ஆயிரம் மெ.டன் எள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்தனா். எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 110 வீதம் ரூ. 1,84,828-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எனவே, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் தினசரி மறைமுக ஏலத்துக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டுவந்து, அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம் என, பெரம்பலூா் விற்பனைக்குழுச் செயலா் சந்திரமோகன் தெரிவித்துள்ளாா்.

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பூட்டியே கிடக்கும் இ-சேவை மையம்! பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே ரூ. 21 லட்சத்தில் கட்டித் திறக்கப்பட்டு, பூட்டியே கிடக்கும் இ- சேவை மையத்தால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. பல்வேறுச் சான்றிதழ்கள் ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தொழில் முனைவோா்களுக்கு நோ்முகத் தோ்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சாா்பில், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா் ஆா். விக்னேஸ்வரன், மாணவிகள் ஆா். ஸ்ரீ ஹரிணி, மாணவி வி.ஆா். தா்ஷிக... மேலும் பார்க்க