செய்திகள் :

பெரம்பலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 6,550 மதிப்பில் சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 1,14,400 மதிப்பில் மின்கலத்தால் இயங்கக் கூடிய சக்கர நாற்காலி, 2 பேருக்கு பாதுகாவலா் நியமனச் சான்றுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன், இலவச தையல் இயந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 332 மனுக்கள் பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே கூரை வீடு எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை கூரை வீடு எரிந்து நாசமானது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள தழுதாழை கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் வேல்முருகன் என்பவரது கூரை வீடு தி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சுகாதாரப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, அரசு ஆரம்ப சுக... மேலும் பார்க்க

நவராத்திரி விழா ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் 8-ஆம் நாளான திங்கள்கிழமை மதுரகாளியம்மன் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தாா். சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (1... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்

பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயிலுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க