செய்திகள் :

பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

post image

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்னையிலேயே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இரண்டாம் இடம், மூன்றாம் இடத்தில் இரண்டு மாணவிகள் என மூன்று மாணவிகள் இந்த பள்ளியில் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் வேல்முருகன் என்பவரின் மகள் மம்தா என்பவர் 588 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இந்த பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

இதேபோன்று பாரதி நகர்ப் பகுதியில் வசிக்கும் புகழேந்தி என்பவரின் மகள் பூஜா மற்றும் வியாசர்பாடியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் மகள் ரோஷினி ஆகிய இருவரும் 583 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதே பள்ளியில் இந்த மாணவி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்ற மேற்கண்ட மூன்று மாணவிகளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, வீடு மற்றும் பள்ளிகள் படிப்புக்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், பள்ளி ஆசிரியர்கள் கடைசிவரை பல்வேறு உதவிகளைச் செய்து எங்களது வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களைப் போல பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு உயர்கல்வி பெற உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

தமிழத்தில் வெள்ளிக்கிழமையான நாளை(மே 9) இரண்டு இடங்களில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி சில முக்கிய... மேலும் பார்க்க

வெய்யில் வெளுத்து வாங்கும் வேலூரில் 3-வது நாளாக மழை!

பகலில் வெய்யில் கொளுத்திய நிலையில் மாலையில் வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இ... மேலும் பார்க்க

தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூர... மேலும் பார்க்க

கண்ணீர் வேண்டாம்.. கைகள் இன்றி +2 தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு ஸ்டாலின் பதில்

கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு, கண்ணீர் வேண்டாம் தம்பி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு ம... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ. 56.47 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருச்சி, துவாக்குடியில் ரூ. 56.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக... மேலும் பார்க்க