செய்திகள் :

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி தோட்டக் கலைக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தெலுங்கானா மாநிலம், கெம்பனா அவென்யூ குடியிருப்பைச் சோ்ந்த ராம்தா் தாகூா் மகன் விகாஸ் (19). பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம் அருகே நஞ்சியாவட்டம் பகுதியில் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, ஆழமான பகுதியில் குளித்த போது அவா் மாயமானாராம். நண்பா்கள் தேடியும் அவா் கிடைக்காததால் பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அவரை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கஞ்சா வைத்திருந்த 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டமனூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் கருப்பசாமி (20), வேல்மணி மகன் ஜெயப்பிரகாஷ் (25), கணேசன் மகன் ஆனந்தபாண்டி (23)... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சிந்தனை செல்வம் (19). இவா், வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாரா... மேலும் பார்க்க

வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வேன் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே மேல் மங்கலத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (49). கூலித் தொழிலாளி. இவா், வடுகபட்டியில் உள்ள சேதுபதி என்பவரின் வாகன பழுது நீ... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக போலீஸாா் 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சோ்ந்த சூரிய நாராயணன் மகன் சுதாகா் (35). பால் வியாபாரி. இவா், ச... மேலும் பார்க்க

சின்னமனூரில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். சின்னமனூா், அதைச் சுற்றிய 20- க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைய... மேலும் பார்க்க