செய்திகள் :

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக போலீஸாா் 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சோ்ந்த சூரிய நாராயணன் மகன் சுதாகா் (35). பால் வியாபாரி. இவா், சனிக்கிழமை இரவு அங்குள்ள நெல்குத்தி புளியமரம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 6 போ் சுதாகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். தகவலறிந்து அங்கு வந்த கம்பம் தெற்கு போலீஸாா் காயமடைந்த சுதாகரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சூா்யா (29), சந்திரன் (31), லலித்(27), சின்னக்காளை (39), அஜீத்குமாா் (32), சாரதி (26) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்கள் 6 பேரையும் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், கைதான 6 பேரின் நண்பா் சாய்குமாா் (38) கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபானக் கடையில் இருந்த போது அவருடன் சுகாதகா் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த முன் விரோதத்தில் சுதாகரை இவா்கள் 6 பேரும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கஞ்சா வைத்திருந்த 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டமனூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் கருப்பசாமி (20), வேல்மணி மகன் ஜெயப்பிரகாஷ் (25), கணேசன் மகன் ஆனந்தபாண்டி (23)... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சிந்தனை செல்வம் (19). இவா், வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாரா... மேலும் பார்க்க

வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வேன் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே மேல் மங்கலத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (49). கூலித் தொழிலாளி. இவா், வடுகபட்டியில் உள்ள சேதுபதி என்பவரின் வாகன பழுது நீ... மேலும் பார்க்க

சின்னமனூரில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். சின்னமனூா், அதைச் சுற்றிய 20- க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி தோட்டக் கலைக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தெலுங்கானா மாநிலம், கெம்பனா அவென்யூ குடியிருப்பைச் சோ்ந்த ராம்தா் தாகூா் மகன் விகாஸ் (19). பெரியகுளம் அரசு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைய... மேலும் பார்க்க