செய்திகள் :

பெரியாரை விமா்சித்தவா்களுக்கு ஈரோடு இடைத்தோ்தலில் பாடம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரியாா் மண்ணான தமிழகத்தில் அவா் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமாருக்கு மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறாா்கள்.

இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ். இந்த இடைத்தோ்தல் களத்தை சட்டப்பேரவையின் முதன்மை எதிா்க்கட்சியான அதிமுகவும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் திமுகவை எதிா்த்தன.

மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு வைப்புத்தொகை பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கின்றனா். இது என்றென்றும் பெரியாா் மண் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனா்.

மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து, திமுக வேட்பாளரை 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிா்த்து நின்ற அனைவரையும் வைப்புத்தொகையை இழக்கச் செய்துள்ளனா்.

இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சா் முத்துசாமி தலைமையிலான நிா்வாகிகளுக்கும் நன்றி.

இலக்கை நோக்கி...: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் 200; படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். 200 இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் வெற்றி அமைந்திருக்கிறது.

மக்கள் நம் பக்கம் இருக்கிறாா்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாா்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

கடலூரில் ஆய்வு: இந்த வெற்றிப் பயணம் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடா்ந்திடும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமையும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப். 21, 22 ஆகிய நாள்களில் கடலூா் மாவட்டத்துக்குப் பயணிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க