செய்திகள் :

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்

post image

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூா் பகுதிக்குள் வந்து செல்லாததால் வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இதற்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் உள்ளிட்டோா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையில் காவல் துறை சாா்பில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூருக்குள் வந்து செல்லும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பூா் அருகே தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன் உள்ளிட்ட போலீஸாா், பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும், பெருமாநல்லூருக்குள் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது, அதிவேகமாக செல்லக் கூடாது என்று பேருந்து நடத்துநா், ஓட்டுநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் (பொ) குமரன் அறிவுறுத்தினாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்க... மேலும் பார்க்க

கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்ப... மேலும் பார்க்க

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் ... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணிய... மேலும் பார்க்க

சீட்டாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சீட்டாடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற... மேலும் பார்க்க