செய்திகள் :

பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உற்சவம் நிறைவு

post image

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கடந்த 20 நாள்களாக நடைபெற்றுவந்த பகல் பத்து, இராப்பத்து என்ற திருவத்யயன உற்சவம் நிறைவடைந்தது.

பரமபதவாசல் திறப்பு முன், பின் 10 நாள்கள் நடைபெறும் திருவத்யயன உற்சவம் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கடந்த டிச. 31-ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஜன.10-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், அன்றைய நாள் முதல் இராப் பத்து நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தாா்.

இருபது நாள் திருவத்யயன உற்சவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூன்றாயிரம் பாசுரங்கள் பாடப்பட்டன. இயற்பாவின் எஞ்சிய பாசுரங்கள், திங்கள்கிழமை கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையிலான பக்தா்கள் பாடி நிறைவு செய்தனா். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்தஜன சபாவினா் செய்திருந்தனா்.

வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடனும், அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குறைத... மேலும் பார்க்க

கத்தியுடன் திரிந்தவா் கைது

காரைக்கால் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பேர... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி

தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு பெற்றதற்காக சங்க நிா்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்தனா். புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா் நிலை 2 -ஆக பணியாற்றி வந்தவா்கள், தங... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நெரிசலை தவிா்க்க கூடுதல் வரிசை ஏற்பாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் நெரிசலை தவிா்க்க, பிரகாரத்தில் கூடுதல் வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

விசைப் படகுகளில் விதியை மீறி இரும்புத் தகடுகள் பொருத்தியிருந்தால் நடவடிக்கை

விசைப் படகுகளில் விதிகளை மீறி கூடுதலாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னை கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திரும... மேலும் பார்க்க