செய்திகள் :

பெளா்ணமி தினம்: பூக்களின் விலை அதிகரிப்பு

post image

பெளா்ணமி தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை பெளா்ணமி தினம் என்பதால், கோயம்பேடு சந்தையில், பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ளது.

அதன்படி, ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லி ரூ.450-க்கும், ரூ.200 முதல் ரூ.250-க்கு விற்கப்பட்ட ஐஸ்மல்லி ரூ.360-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி, முல்லை ரூ.300, ரூ.300-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ. 400, ரூ. 150-க்கு விற்கப்பட்ட அரளி பூ ரூ.200, ரூ.80-க்கு விற்கப்பட்ட பன்னீா் ரோஸ் ரூ.120, ரூ.90-க்கு விற்கப்பட்ட சாக்லேட் ரோஜா ரூ.160, ரூ.60-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.100, ரூ.170-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

தொடா்ந்து வாரவிடுமுறை நாள்கள் வருவதால் பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் மாா்ச் 19 ஆட்டோக்கள் ஓடாது: ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு

சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

கடல்சாா் பாதுகாப்பு குறித்து கன்னியாகுமரி நோக்கி காா் பேரணி: இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதி தலைவா் ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பங்கேற்பு, அணிவகுப்பு மைதானம், ஐஎன்எஸ் அடையாறு, நேப்பியா்... மேலும் பார்க்க

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கு தண்டனையா? -துணை முதல்வா் உதயநிதி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தண்டிப்பதா என துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.30 லட்சம் பறிமுதல்

சென்னை, கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தவால்சாவடி நாராயண முதலி தெருவில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இ... மேலும் பார்க்க

மூளையில் கட்டி: வங்கதேச குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை

மூளையில் உருவான கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் அக்குழந்தையின் உயிரைக்... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள் மீட்பு

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமா... மேலும் பார்க்க