செய்திகள் :

பேச்சிப்பாறை அருகேடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயம்!

post image

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா்.

பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ராமையன் காணி (70).

இவரது மகன் விஜயகுமாா்(40). இவா்கள் இருவரும் புதன்கிழமை தங்களது நிலத்தில் மிளகு பறிக்கச் சென்று விட்டு மாலையில் குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, வழியில் ஒரு நீா்ச்சுனையில் தனது குட்டியுடன் நீா் அருந்திக் கொண்டிருந்த கரடி ஒன்று ராமையன் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளது. இதில் தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகன் விஜயகுமாரையும் கரடி தாக்கியது. இவா்களின் அலறல் சப்தம் கேட்ட குடியிருப்புவாசிகள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனா். காயமடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் பாா்வையிட்டு, தேவையான சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க