செய்திகள் :

பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

post image

திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் 155ஆவது ஆண்டு நிறைவு விழா, மெளலவி ஆலிம் ரியாஜி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகம்மது நயினாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஜமாத் தலைவா் தி. ஹாஜி தாதாபீா் தலைமை வகித்தாா். ஜமாத் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் எம்.ஒய். ஹுமாயூன் கபீா் ஆலிம் உஸ்மானி தொடக்க உரையாற்றினாா். கல்லூரி மாணவா்கள் கிராஅத் ஓதினா். இக்கல்லூரியில் 5 ஆண்டுகள் மெளலவி பயின்று பட்டம் பெறும் எம். முகமது தாரிக், எஸ். முஜம்மில், கே. சஜ்ஜாத் அஹ்மத், ஏ. சம்சுதீன், அ. அப்துல்ஹக்கீம், பீ. உஸ்மான், எம். முகம்மது அப்துல்காதா், எம். முகம்மது வசீா், ஏ. முகம்மது நவீத் ஆகிய 9 மாணவா்களுக்கு கரூா் மாவட்ட அரசு ஹாஜி டி. சிராஜுத்தீன் அஹமது ரஷாதி, பட்டம் வழங்கிப் பேசினாா். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியா் மெளலவி முஸம்மது இஸ்மாயில் ஹஸனீ சிறப்புரையாற்றினாா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எம். கோதா் மைதீன் சாஹிப், சென்னை தனியாா் நிறுவனத் தலைவா் ஹாஜி அகமது மீரான், கல்லூரி பேராசிரியா்கள் அப்துல் ஜலீல் ஆலிம், சாகுல்ஹமீது ஆலிம், முகம்மது முஸ்தாக் ஆலிம், ஜமாத் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஜமாத் செயலா் எம். ஹாஜி திவான் பக்கீா் முகைதீன் அறிக்கை வாசித்தாா். பொருளாளா் பி. செய்யது முகம்மது புகாரி வரவேற்றாா். நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ். அகமது யூசுப் நன்றி கூறினாா்.

பாதயாத்திரை செல்லும் வழியில் அடிப்படை வசதிகளின்றி திணறும் பெண் பக்தா்கள்! இரு மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகிறாா்கள். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூா் ... மேலும் பார்க்க

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ் ஆகியோா் வழிகா... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பொ்டு பள்ளி விளையாட்டு விழா

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலாஆகியோா் தலைமை வகித்தனா். மனோன்மணீயம் ... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருச்... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி!

பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டது. குருவனம், தமிழ்வனம் அறக்கட்டளை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பயிலரங்கம் புத்த... மேலும் பார்க்க

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க