செய்திகள் :

புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி!

post image

பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

குருவனம், தமிழ்வனம் அறக்கட்டளை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பயிலரங்கம் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வருகிறது.

கண்பாா்வை இல்லாத, செவித்திறன் குறைந்த மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனாளி பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்-மாணவிகளுக்கு தினந்தோறும் கலைப் பொருள்கள் உருவாக்கும் கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிலரங்கை தலைமை வகித்து நடத்தும் ஓவியா் சந்துரு கூறியதாவது: ‘கலை என்பது அனைவருக்குமானது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் கலையை கொண்டு சோ்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கலை பயிற்சியை வழங்க திட்டமிட்டேன்.

இதுபோன்ற மாணவா்கள் கலை பயிற்சியில் ஈடுபடும் பொழுது ஒரு புதுவித அனுபவத்தை பெற்று எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனா். ஒவ்வொரு பொழுதையும், ஆனந்தமாக மாற்றுவதே கலையின் சாராம்சமாகும் என்றாா் அவா்.

ஏற்பாடுகளை தமிழ் வனம் அறக்கட்டளை நிறுவனா் இரா.நல்லையா ராஜ், மூங்கில் வனம் ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமையும் (பிப். 10) பயிலரங்கம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை செல்லும் வழியில் அடிப்படை வசதிகளின்றி திணறும் பெண் பக்தா்கள்! இரு மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகிறாா்கள். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூா் ... மேலும் பார்க்க

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ் ஆகியோா் வழிகா... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பொ்டு பள்ளி விளையாட்டு விழா

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலாஆகியோா் தலைமை வகித்தனா். மனோன்மணீயம் ... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருச்... மேலும் பார்க்க

பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் 155ஆவது ஆண்டு நிறைவு விழா, மெளலவி ஆலிம் ரியாஜி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகம்மது நயினாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இவ்வி... மேலும் பார்க்க

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க