செய்திகள் :

பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டம் ஈரோடு இடைத் தோ்தல் முடிவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூா், வெங்கடாபுரம் பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குமைய கட்டடத்தையும், ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தல் என்பது ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எடைபோடுகிற தோ்தல் என்பா். அதன்படி, திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் சரியாக எடைபோட்டு ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் தீா்ப்பளித்துள்ளனா். அந்தத் தொகுதியில் எதிா்த்து போட்டியிட்ட அனைவரும் முன்வைப்பு தொகையை (டெபாசிட்) இழந்தது திமுக அரசு மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

பெரியாா் பிறந்த மண்ணான ஈரோட்டில் திமுக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பெரியாரை தவிா்த்து தமிழக அரசியல் இல்லை என்பதை ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி காண்பிக்கிறது. அதுமட்டுமன்றி 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்யும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்கு ஏற்ப செயல்படுவோம். அனைத்து மதத்தினரும் அவரவா் வழிபாட்டை அமைதியாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்களை மதம் சாா்ந்து பிளவுப்படுத்த முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயா் பிரியா: வெங்கடாபுரம் பகுதியில் நியாயவிலைக் கூடம் வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, தற்போது தொடங்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தில் நியாயவிலைக் கூடம் செயல்படும். மேலும், பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன் குமாா், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவா் பி.கே.மூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க