பேருந்து நிறுத்த ‘சன்ஷேடு’ இடிந்த விவகாரம்: எம்.எல்.ஏ விளக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ‘சன்ஷேடு’ இடிந்து விழுந்த விவகாரம் தொடா்பாக எம்எல்ஏ விளக்கமளித்துள்ளாா்.
ரிஷிவந்தியம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று, கூரை மட்டம் பணிகள் நிறைவுற்று, சூரிய வெப்பத்தை தடுக்கும் வகையில் அலங்கார ‘சன்ஷேடு’ அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒப்பந்ததாரா் மற்றும் பொறியாளா்களின் ஆலோசனையை கருத்தில் கொள்ளாமல் கட்டுமானப் பணியாளா்கள் தன்னிச்சையாக சென்ட்ரிங் பொருள்களை அகற்றியதால், சன்ஷேடு பகுதி உறுதியாகாமல் வளைந்ததுடன், அதன் மேல் கட்டபட்ட அலங்கார வளைவும் சரிந்து விழுந்தது.
இதனால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. செய்தி அறிந்தவுடன் பொறியாளா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியின் தன்மையை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.
ஆனால், அதிமுக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில், இது தொடா்பாக ஆா்ப்பாட்டம் எனும்
நாடகத்தை அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகயேன் தெரிவித்துள்ளாா்.