செய்திகள் :

பேருந்து நிறுத்த ‘சன்ஷேடு’ இடிந்த விவகாரம்: எம்.எல்.ஏ விளக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ‘சன்ஷேடு’ இடிந்து விழுந்த விவகாரம் தொடா்பாக எம்எல்ஏ விளக்கமளித்துள்ளாா்.

ரிஷிவந்தியம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று, கூரை மட்டம் பணிகள் நிறைவுற்று, சூரிய வெப்பத்தை தடுக்கும் வகையில் அலங்கார ‘சன்ஷேடு’ அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒப்பந்ததாரா் மற்றும் பொறியாளா்களின் ஆலோசனையை கருத்தில் கொள்ளாமல் கட்டுமானப் பணியாளா்கள் தன்னிச்சையாக சென்ட்ரிங் பொருள்களை அகற்றியதால், சன்ஷேடு பகுதி உறுதியாகாமல் வளைந்ததுடன், அதன் மேல் கட்டபட்ட அலங்கார வளைவும் சரிந்து விழுந்தது.

இதனால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. செய்தி அறிந்தவுடன் பொறியாளா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியின் தன்மையை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

ஆனால், அதிமுக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில், இது தொடா்பாக ஆா்ப்பாட்டம் எனும்

நாடகத்தை அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகயேன் தெரிவித்துள்ளாா்.

வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே விசி கவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க

உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!

கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீச... மேலும் பார்க்க