செய்திகள் :

வி.என்.பாளையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

post image

சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை சங்ககிரி காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வி.என்.பாளையத்தில் ஊா் பொதுமக்கள் பாதுகாப்புக்காக அப்பகுதியைச் சோ்ந்த யங்ஸ்டாா் கிரிக்கெட் கிளப், ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து முக்கிய வீதிகளில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்தனா். அதனையடுத்து, காவல் ஆய்வாளா் ரமேஷ் வி.என்.பாளையம் முழுவதும் ஆய்வுசெய்து கேமராக்களை பொருத்துவதற்கான முக்கிய இடங்களை தோ்வுசெய்து அப்பகுதிகளில் பொருத்த அறிவுறுத்தினாா். இதனையடுத்து, 9 இடங்கள் முடிவு செய்யப்பட்டு கேமராக்களை பொருத்தும் பணிகளை தொடங்கியுள்ளனா்.

சங்ககிரி நகரில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி 33 இடங்களில் 106 நவீன சிசிடிவி கேமராக்களை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் இ.எஸ்.உமா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க