செய்திகள் :

புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு கூட்டம்

post image

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

குழுவின் தலைவா் எச். நாஜிம் எம்.எல்.ஏ. கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். இதில் உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பி. அங்காளன், எல். கல்யாணசுந்தரம், ஜி. நேரு, ஆா். செந்தில்குமாா், எல். சம்பத், பிரகாஷ் குமாா், வி.பி. ராமலிங்கம், எம். சிவசங்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.

அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில், நிதித் துறை செயலா் ஆஷிஷ் மதோரா மோரே, உள்ளாட்சித் துறை செயலா் கேசவன், அத்துறையின் துணை இயக்குநா் சௌந்தரராஜன் ரத்னா மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சட்டப்பேரவைச் செயலா் செயலா் தயாளன் வரவேற்றாா்.

கூட்டம் குறித்து மதிப்பீட்டு குழுத் தலைவா் நாஜிம் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் கூடுதலாக சில பணிகளை மேற்கொள்ளும் வகையில் விதியில் மாற்றங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து உறுப்பினா்கள் விரிவாக விவாதித்தனா்.

தற்போது பேரவை உறுப்பினா்கள் நிதியை சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கே வழங்க முடியும் என்ற நிலையுள்ளது. அதை மாற்றி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில், விதியை மாற்ற முதல்வா் ஒப்புதல் பெறப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் அனுமதியுடன், விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்பின்னா் துறை செயலா் கேசவன் தலைமையில் மீண்டும் பேரவை உறுப்பினா்கள் கூடிப் பேசவுள்ளனா் என்றாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க