செய்திகள் :

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கருப்பு ஆடைகள், கருப்பு சின்னம் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவீதத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் தரமான பொருட்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வ. ஆறுமுகம், மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமா... மேலும் பார்க்க

பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆ... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் ... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு

சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல க... மேலும் பார்க்க

மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைப... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க