செய்திகள் :

பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்

post image

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூதோண்டி, நரியனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ராமநாதபுரத்துக்கு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

இவா்களுக்காக, இந்த கிராமங்களிலிருந்து காலையும் மாலையும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, நேரம் கடந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சிரமப்பட்டனா்.

எனவே, மீண்டும் காலையும் மாலையும் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மாணவா்கள் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், தங்களது கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி மாணவ, மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். ஆனால், அவா்களைக் காவல் துறையினா் தடுத்ததால் மாணவ, மாணவிகள் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மாணவ, மாணவிகளை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அவா்களுடைய மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கிராமங்களுக்குப் பேருந்து சேவை ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து சென்றனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க