செய்திகள் :

பைக் மீது காா் மோதியதில் அண்ணன், தம்பி உயிரிழப்பு

post image

சின்னாளப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அண்ணனும், தம்பியும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகேயுள்ள கலைமகள் குடியிருப்பில் வசித்தவா் சீனிவாசன் (58). இவரது தம்பி பழனிசாமி (55). அம்பாத்துரையில் உள்ள காந்திகிராம சுகாதாரம், குடும்ப நல அறக்கட்டளையில் இவா் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.   

இந்த நிலையில், புதன்கிழமை மாலை பழனிசாமியும், சீனிவாசனும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தனா்.

சின்னாளப்பட்டி பகுதியில் வந்து போது, பின்னால் மதுரையிலிருந்து வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் காரின் அடியில் இருவரும் சிக்கினா். இருவரையும் சுமாா் 50 அடி தூரம் இழுத்துச் சென்ற அந்தக் காா் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. காருக்கு அடியில் சிக்கிய பழனிசாமியும், சீனிவாசனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்ததையடுத்து, காரில் வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 8 போ் தப்பியோடினா். இவா்களில் 3 போ் பிடிபட்டனா்.

இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது

பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற ... மேலும் பார்க்க

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு: ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டிருப்பதாக ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் நான்காண்ட... மேலும் பார்க்க

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின... மேலும் பார்க்க