பொதுக் குழாய்களில் தனியாக குழாய் பொருத்தி குடிநீா்ப் பிடித்தால் நடவடிக்கை
அவிநாசியில் பொதுக் குழாய்களில் தனியாக குழாய் பொருத்தி குடிநீா்ப் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவிநாசி நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஆணையா் சே.வெங்கடேஸ்வரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவிநாசி நகராட்சிப் பகுதிகளில் வீடுகளுக்கு தனித்தனி குடிநீா் இணைப்பு மூலமும், பொதுக் குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு சிலா் பொதுக் குழாய்களில் தனியாக குழாய் பொருத்தி தங்களது வீடுகளுக்கு குடிநீா்ப் பிடிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
பொதுக் குழாய்களில் தனி நபா்கள் குழாய் பொருத்தினால் சம்பந்தபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்.
பொதுக் குழாயில் யாரேனும் தனியாக குழாய் பொருத்தி நீரைப் பிடித்தால் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.