Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' - புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!
பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
நீடாமங்கலம் வணிகா் சங்கம் சாா்பில், நீடாமங்கலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு நினைவு பரிசு மற்றும் ரூ. 1000 ஊக்கத்தொகை சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி, நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி, நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. வணிகா் சங்கத் தலைவா் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா்.