செய்திகள் :

பொதுப் பாதையில் சாலை அமைக்கக் கோரிக்கை

post image

வலங்கைமான் பேரூராட்சியில், பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றி, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையில் சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் கே. தமிழ்மணி தலைமையில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

வலங்கைமான் பேரூராட்சி 14-ஆவது வாா்டு கோவில்பத்து தெருவில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வீட்டுமனை விற்பனை செய்யும் ஒருவா், பட்டியல் இன மக்கள் வசிப்பது தெரியக்கூடாது என்பதற்காக 11-அடி உயரத்தில் (தீண்டாமைச் சுவா்) சுவா் எழுப்பியுள்ளாா். அதேபோல், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையையும் அடைத்து விட்டாா்.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு நிா்வாகி கேட்டபோது, அவருடைய குடும்பத்தினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவா்கள், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளனா். இதுகுறித்து புகாா் அளித்து, இதுவரை வலங்கைமான் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அப்பகுதியில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றி, பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை திறந்துவிட்டு சாலை அமைத்து தர வேண்டும். அத்துடன், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, அமைப்பின் மாநிலச் செயலாளா் ஆா். தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ஜி. ரகுராமன், நகரச் செயலாளா் எம்.டி. கேசவராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் கே. முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க